×

கிராம பகுதியில் அட்டகாசம் குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த எல்.எண்டத்தூர் கிராமம் அருகே உள்ள இராமாபுரம் வனப்பகுதியிலிருந்து எல்.எண்டத்தூர் கிராமத்திற்கு கடந்த சில வாரங்களாக கூட்டம் கூட்டமாக குரங்குகள் கிராமத்திற்குள் புகுந்து வயல்வெளிகளிலும், தோட்டங்களில் காய்கறிகள், பழங்களை நாசம் செய்து வந்தன. மேலும் பொதுமக்களை பயமுறுத்தியும் சிலரை கடித்தும் வந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி பரிந்துரையின் பேரில் மதுராந்தகம் வனச்சரகர் வெங்கடேசன் தலைமையிலான வனவர்கள் எல்.எண்டத்தூர் பகுதியில் சுற்றித்திரிந்து அட்டகாசம் செய்த  24 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து இராமாபுரம் வனப்பகுதியில் விட்டனர்….

The post கிராம பகுதியில் அட்டகாசம் குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Uthramerur ,Ramapuram forest ,L. Endathur ,Uttaramerur ,Dinakaran ,
× RELATED சாலவாக்கத்தில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறையினர் சோதனை